7/21/08

வலி
-------------------------

பிரிவின் வலி
பிரிந்தால்தான் புரியும்
இழப்பின் வலி
இழந்தால்தான் தெரியும்
எங்கள் வலி
அகதியாய் வாழ்ந்தால்
உங்களுக்குப் புரியும்
மு. கோமதி    பாப்பாந்தாங்கள்
அகதி அகதி என்று
அழைக்கும்போது
கூட்டுக்குள் நத்தையாய்
எங்கள் மனம்
குறுகிப் போகிறது
நாங்கள் மனிதர்கள்
உங்களைப்போல்
எங்களுக்கும் வலிக்கும்.

0 comments: